உத்தரபிரதேசத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதமாக ஒரே நாளில் ரூ .32 லட்சம் வசூல்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், புதிய மோட்டார் வாகனங்கள் சட்டத்தில் 5 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதற்கு பலரும் தங்களின் அதிருப்தியை பதிவு செய்து வந்த நிலையில், பல்வேறு மாநிலங்களில் அபராத தொகை குறைக்கபட்டது. 


இந்நிலையில், போக்குவரத்து விதிமீறல் பயனர்களை சுற்றி வளைத்த மீரட் போலீசார் சனிக்கிழமை மாலை ரூ .32 லட்சம் அவரை அபராதம் வசூலித்தனர். 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மீரட்டில் 41 இடங்களில் போக்குவரத்து காவல்துறையினரால் சோதனை நடத்தப்பட்டது, மேலும் போக்குவரத்து விதிகள் குறித்து மக்களுக்கு அறிவுறுத்துவதற்காக பள்ளி குழந்தைகளால் பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சீவ் பாஜ்பாய் ANI-யிடம் தெரிவித்துள்ளார்.


ட்விட்டர், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக தளங்களிலும் தனி பிரச்சாரம் நடத்தப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள காவல்துறையினரும் நவம்பர் 29-30 தேதிகளில் சிறப்பு இயக்கி நடத்தினர் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 586 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். 


ஹைதராபாத் நகர போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் அனில் குமார், ANI இடம் 50 குழுக்கள் நிறுத்தப்பட்டதாகவும், 5998 ஓட்டுநர்கள் சோதனை செய்யப்பட்டதாகவும், அதில் 586 ஓட்டுநர்கள் மது போதையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.