டில்லி தில்ஷாகார்டன் பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் 5 வயது குழந்தை கடந்த ஜனவரி 25-ம் தேதி காலை வழக்கம் போல் பள்ளி வேனில் சென்றார். வேன் முக்கிய சாலை வழியாக சென்றபோது வேனை பின் தொடர்ந்து ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த இருவர் துப்பாக்கிமுனையில் குழந்தையை கடத்திச் சென்றனர். பின்னர் ஜன., 28-ம் தேதி போனில் பேசிய கடத்தல் கும்பல் குழந்தை வேண்டுமானால் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தகவலறிந்த டில்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை இருப்பிடத்தை மொபைல் போன் மூலம் தேடினர். இறுதியில் கடத்தல் கும்பல் தெற்கு டில்லியில் ஷாலிமர் சிட்டி ஷாகிபாபாத் அப்பார்மென்டில் அடைத்துவைக்கப்பட்டிருந்ததையறித்து ஆபரேசனை துவக்கினர். 


அதன்படி இன்று அதிகாலை 1 மணியளவில் அப்பகுதியை சுற்றிவளைத்தனர். போலீசார் ரவுண்டுகட்டியதை தெரிந்த கடத்தல்காரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசாரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கிச்சண்டையில் கடத்தல்காரன் ஒருவன் கொல்லப்பட்டான். இந்த துப்பாக்கிச்சண்டையில் குழந்தை பத்திரமாக மீட்டனர்.