சார்க் நாடுகளின் உள்துறை மந்திரிகள் பங்கேற்கும் மாநாடு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று  தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் புறப்பட்டு சென்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற ராஜ்நாத் சிங்கை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். அதேவேளையில், ராஜ்நாத் வருகைக்கு எதிர்ப்பு பாகிஸ்தானில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 


ராஜ்நாத்சிங் பாகிஸ்தான் வருகை தந்தால் நாடு தழுவிய அளவில் போரட்டம் நடத்தப்படும் என்று பயங்கரவாதி ஹபீஸ் சயீத் அறிவித்துள்ளதால்,  அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், ராஜ்நாத் சிங்கிற்கு அந்நாட்டு ஜனாதிபதிக்கு நிகரான உச்ச கட்ட பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.