எஸ்பிஐ வங்கி பல்வேறு சேவைகளுக்கு அறிவித்துள்ள புதிய கட்டண விகிதங்கள் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலவமாக இதுவரை அளிக்கப்பட்டு வந்த ஐஎம்பிஎஸ் எனப்படும் உடனடி பணபரிமாற்ற சேவைக்கு இனிமேல் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும். 


> ஒரு லட்சம் ரூபாய் வரை 5 ரூபாய் சேவை வரி வசூலிக்கப்படும். 


> 2 லட்சம் ரூபாய் வரை 15 ரூபாய்


> 5 லட்சம் ரூபாய் வரை 25 ரூபாய் 


என கட்டணம் இருக்கும். 


அதேபோல் ஏ.டி.எம். கார்டுகளை பொறுத்தவரை ரூபே கார்டுகள் மட்டுமே இலவசம். இதர கார்டுகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.


ஏ.டி.எம்.களில் மாதந்தோறும் 4 முறை மட்டுமே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும், அதற்கு மேற்பட்ட பண பரிவர்த்தனைகளுக்கு சொந்த கணக்கு இருக்கும் கிளையில் 50 ரூபாயும், ஏ.டி.எம்.ல் 10 ரூபாயும், இதர வங்கிகளின் ஏ.டி.எம்.களில் தலா 20 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும். 


> 10 காசோலைகள் உள்ள புத்தகத்திற்கு 30 ரூபாயும்


> 25 காசோலைகளுக்கு 75 ரூபாயும்


> 50 காசோலை உள்ள புத்தகத்திற்கு 150 ரூபாயும் 


கட்டணமாக செலுத்த வேண்டும். இவற்றிற்கு சேவை வரியும் உண்டு. அதேபோன்று ஸ்டேட் வங்கியின் வட்டி எனப்படும் ஸ்மார்ட் போன் செயலில் நடத்தும் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.