ஜம்மு காஷ்மீரில் 40 குழந்தைகளுடன் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைத்துள்ள ரஜோரி மாவட்டத்தில் 40 குழந்தைகளுடன் சென்ற பள்ளி பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 


இந்த விபத்தில் உயிர் பலி ஏதாவது ஏற்பட்டுள்ளதா? என இதுவரை தகவல் வரவில்லை. ஆனால் பலர் காயம் அடைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


சுற்றுலா சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டதாக மாணவரகள் கூறியுள்ளனர். இவர்கள் மன்ஹகோட்திலிருந்து பிர் காளிக்குச் சுற்றுலா சென்றதாக தெரிகிறது.