உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடக்க உள்ள எஸ்.சி.ஓ., மாநாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு இங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 


இதற்கிடையில் அங்கு வந்துள்ள, சீன அதிபர் ஜி-ஜிங்பிங்கை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். என்.எஸ்.ஜி., (அணு ஆயுத சப்ளை குழு) விவகாரத்தில் சீனா ஆதரவு அளிக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இந்த சந்திப்பில் இந்திய, சீன உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.