கடந்த 14 ஆண்டாக 100-க்கும் மேற்பட்ட சிறுமிகளை கொடுமைப் படுத்திய சுனில் ரஸ்தோகி டெல்லியில் கைது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்தவன் சுனில் ரஸ்தோகி. டெல்லியில் வசித்து வருகிறான். இவனுக்கு தற்போது 38 வயதாகிறது. திருமணமாகி மனைவியும், 3 மகள்கள், 2 மகன்களும் உள்ளனர். 


1990-ம் ஆண்டு டெல்லிக்கு பிழைப்பு தேடி வந்தான். அப்போது அவனுக்கு வயது 12. டெய்லர்களிடம் உதவியாளராக வேலைக்கு சேர்ந்து பின்னர் சொந்தமாக டெய்லர் தொழில் செய்து வந்தான்.


டெல்லியில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு செல்வான். அங்கு பள்ளி முடிந்து வீடு திரும்பும் 7 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளை சந்தித்து தெரிந்தவன் போல் பேச்சு கொடுப்பான். ஒதுக் குப்புறமான இடத்துக்கு அழைத்துச் செல்வான். அங்கு சிறுமிகளை மிரட்டியும் அடித்து உதைத்தும் பாலியல் பலாத்காரம் செய்து விரட்டி விடுவான். 


இதற்கிடையே கடந்த 10-ம் தேதி இரண்டு பெற்றோர் பள்ளியில் படிக்கும் தங்களது மகள்கள் மர்ம நபரால் கடத்தி கொடுமைப்படுத்தப்பட்டதாக போலீசில் புகார் செய்தனர். இதை விசாரித்த டெல்லி போலீசார் ஏற்கனவே நடந்த சிறுமிகள் கடத்தல், பாலியல் கொடுமைகளும் அனைத்தும் ஒன்று போல் இருந்தன. எனவே ஒரே நபர் தான் இந்த செயலில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.


கிழக்கு டெல்லி பகுதியில் போலீசாருக்கு டெய்லர் ரஸ்தோகி பக்கத்து வீட்டு சிறுமியிடம் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. அவனைப் பிடித்து விசாரித்தபோது சிறுமிகளி டம் பாலியல் கொடுமையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டான். சிறுமிகள் கடத்தப்பட்ட பள்ளிகள், பொது இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் ரஸ்தோகி உருவம் பதிவாகி இருந்தது. இதையடுத்து நேற்று காமகொடூரன் ரஸ்தோகி கைது செய்யப்பட்டான். 


அவன் கடந்த 14 ஆண்டாக இதுபோன்ற பாலியல் கொடுமையில் ஈடுபட்ட தாகவும் 100-க்கும் மேற்பட்ட சிறுமிகளை கொடுமைப் படுத்தியதாகவும் வாக்கு மூலம் அளித்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.