பாஜக-வின் சத்ருகன் சின்ஹா ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாஜகவில் சுமார் 30 ஆண்டுகளாக இருந்து வரும், பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா அக்கட்சியை விட்டு விலகி காங்கிரஸ் கட்சியில் இன்று ராகுல் காந்தி முன்னிலையில் இணைந்தார். சமீபத்தில், பாஜகவின் எம்.பி சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பீகார் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் கட்சியில் இணைவது பற்றியும், அவருக்கு எந்த தொகுதி ஒதுக்குவது பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 


இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பீகாரர் காங்கிரஸ் தலைவர் சக்தி சிங் கோஹில், நடைபெற்ற சந்திப்பில் சத்ருகன் சின்ஹா, காங்கிரஸ் கட்சியில் சேருவார் என முடிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் கட்சியில் சேர்ந்த பிறகு ஸ்டார் தலைவர்கள் வரிசையில் இடம் பெறுவார். நட்சத்திர பிரச்சாளராகவும் பணியாற்றுவார் என கூறியிருந்தார். 


இந்நிலையில், இன்று காலை ஏப்ரல் 6 ஆம் தேதியன்று பா.ஜ.க. கட்யிளிருந்து கங்கிரஸில் இணைந்தார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது குடும்பத்தாரைப் போலவே எனது மக்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை, பாரத ரத்னா நானாஜி தேஷ்முக், தாமதமான மற்றும் பெரிய பிரதமர் நடிகர் நாகரிபாகுபாயின் வழிகாட்டுதல் மற்றும் ஆசீர்வாதத்துடன் இந்த விருந்தில் நான் வருகிறேன். நண்பர் தத்துவஞானி, இறுதி தலைவர், குரு மற்றும் வழிகாட்டி, ஸ்ரீ லங்கா ஐ.கே.அத்வானி. " அவர் சேர்க்கிறார்.


கடந்த வாரம், 72 வயதான BJP-யை விட்டு விலகுவதாக தனது முடிவை அறிவித்திருந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.