இட்டாவா: முன்னாள் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் சிவ்பால் யாதவ் மார்ச் 11-ம் தேதி உ.பி தேர்தலில் முடிவுகள் அறிவிப்பு பின்னர் ஒரு புதிய கட்சியை தொடங்கப்போவதாக அறிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இட்டாவா ஒரு பேரணியில் உரையாற்றிய முலாயம் சிங்கின் இளைய சகோதரர் சிவ்பால் யாதவ், தனது பாரம்பரிய ஜஸ்வந்த் நகர் தொகுதிக்கான போட்டியில் சமாஜ்வாடி கட்சி தரப்பில் போட்டி இடுவேன் என்றார். மேலும் சிவ்பால் யாதவ் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.


கட்சியில் ஊழலை தடுக்க முயன்றதால் நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன்.


இந்நிலையில் சமாஜ்வாடியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். அகிலேசால் சீட் மறுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். சமாஜ்வாடி தொண்டர்கள் ஏராளமானோர் என்னை ஆதரிக்கின்றனர். முலாயம் மற்றும் எனக்கு எதிராக அகிலேஷ் செயல்பட்டு வருகிறார் என சிவ்பால் யாதவ் கூறினார்.