பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக டெல்லி மாறி வருகிறது என்பதற்கு இன்னொரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லி நரேலா பகுதியில் அமைந்துள்ள மதரஸாவில் படித்து வரும் ஒன்பது வயது சிறுமியை 70 வயதான ஆண் கற்பழித்துள்ளார் என டெல்லி மகளிர் ஆணையம் (டி.சி.டபிள்யு) தலைவர் சுவாதி மலிவால் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதைக்குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியதாவது:- 


டெல்லி நரேலா பகுதியில் அமைந்துள்ள மதரஸாவில் படித்து வரும் ஒன்பது வயது சிறுமியை 70 வயதான ஆண் கற்பழித்துள்ளார். இந்த சிறுமிக்கு மிகவும் மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதிகமான ரத்தம் வெளியேறி உள்ளது. சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு உள்ளார் எனக் கூறியுள்ளார்.


 



 


குழந்தைகள் எவ்வளவு காலம் கஷ்டப்படுவார்கள்? குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க எங்கையாவது இடங்கள் இருக்கா? கற்பழிப்பு செயல்களில் ஈடுபடுவர்களுக்கு 6 மாதங்களில் எப்பொழுது தூக்கு தண்டனை வழங்கப்படும்? எவ்வளவு காலம் மௌனமாக இருக்க வேண்டும்? இந்த செயல்களை பார்த்தால் இரத்தம் கொதிக்கவில்லையா? எனவும் பாலியல் பலாத்காரம் எதிராக தனது கோபத்தை பதிவு செய்துள்ளார்.