Shocking Bizarre News: குஜராத்தில் தனது காதலன் உடன் உடலுறவு கொண்ட 23 வயது பெண் ஒருவருக்கு, உடனே அதிகமான இரத்தப் போக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் காதலனின் செய்த பெருந்தவறால் அந்த பெண் உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் நடந்தேறி உள்ளது. 23 வயது நர்ஸிங் பயிலும் மாணவி, அவரது காதலன் உடன் அங்கு தங்கியிருந்தார். இவரும் அங்கு தனிமையில் இருந்த நேரத்தில் உடலுறவு மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இருவரும் உடலுறவு மேற்கொண்ட நிலையில், பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து அதிக இரத்தபோக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


90 நிமிடங்கள் விரயம்


இதனால் அச்சமடைந்த இருவரும் என்ன செய்வது என தெரியாமல் முழித்துள்ளனர். வலியில் அந்த பெண் துடிக்க, அவரது காதலனோ ஆம்புலன்ஸை அழைப்பதற்கு பதில் 90 நிமிடங்களாக, இரத்தப்போக்கு நிறுத்துவது எப்படி என்பது குறித்து ஆன்லைனில் தேடி பார்த்துள்ளார். அதாவது, 90 நிமிடங்கள் நேர விரயத்தால் அந்த பெண்ணின் உடல்நிலை மேலும் மோசமாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | கோமியம் குடித்தால் தான் அனுமதி! பாஜக தலைவரின் பேச்சால் சர்ச்சை!


இந்நிலையில், அந்த பெண்ணின் காதலனை போலீசார் கைது செய்தனர். 26 வயதான அந்த நபரின் மீது சாட்சியங்களை அழித்ததாகவும், கொலைக்கு சமமான குற்றமற்ற கொலைக் குற்றச்சாட்டிலும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மருத்துவ உதவியை அழைப்பதற்கு நேர விரயம் செய்தது மட்டுமின்றி, அந்த பெண்ணின் கடினமான சூழலிலும் கூட உடலுறவை அந்த நபர் தொடர்ந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. 


இதை செய்திருந்தால் உயிரோடு இருந்திருப்பார்...


இரத்தப்போக்கு துணியை வைத்து நிறுத்தவும் அந்த நபர் முயற்சித்ததாக தெரிகிறது. ஆனால், அது பயனளிக்கவில்லை. அந்த பெண் அதிக இரத்தப்போக்கால் மயக்கம் அடைந்துள்ளார். இதனால் என்ன செய்வது என தெரியாத அந்த இளைஞர், தனது நண்பன் ஒருவனை அங்கு அழைத்துள்ளார். அவனின் உதவியுடன் அந்த பெண்ணை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அந்த மருத்துவமனையின் பரிந்துரையின் பேரில் அந்த பெண் அரசு மருத்துவமனைக்கு பின்னர் மாற்றப்பட்டார். அந்த பெண்ணின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனைக்கு வரும் முன்னரே, அந்த பெண் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். 


இந்த சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் சுஷில் அகர்வால்,"அந்த பெண் அதிக இரத்தப்போக்கு காரணமாகவே உயிரிழந்தார் என உடற்கூராய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. 108 சேவைக்கோ அல்லது மருத்துவ உதவிக்கோ அழைக்காமல், அந்த நபர் நண்பர்களை அழைத்து தனிப்பட்ட வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். அவருக்கு சரியான சமயத்தில் அவசர உதவி அளிக்கப்பட்டு, ட்ரிப்ஸ் போடப்பட்டு, ரத்தம் செலுத்தப்பட்டு, மருந்துகள் அளிக்கப்பட்டிருந்தால் அந்த பெண் உயிரோடு இருந்திருப்பார்" என்றார். அந்த பெண் நவ்சாரி மாவட்டத்தில்தான் முதலாம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து வருகிறது. அந்த பெண் சமூக வலைதளத்தில் சில மாதங்களுக்கு முன் பழகி அந்த நபருடன் காதலில் இருந்துள்ளார் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | திருப்பதி லட்டு விவகாரம்: சந்திரபாபு நாயுடு மீது உச்ச நீதிமன்றம் காட்டம் - முழு விவரம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ