இன்று காலை ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள டராம்டோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் எனத் தகவல் கிடைத்துள்ளது. மேலும் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து ஏராளமான வெடிபொருட்களும், துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


இந்தநிலையில், தற்போது தெற்கு காஷ்மீரில் கீகமம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அங்கு காலை முதலே தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது.