பாஜக-வில் இருந்து விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து புதிய அரசியல் கட்சியை தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பஞ்சாப் மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி  "ஆவாஸ் இ பஞ்சாப் என்ற புதிய கட்சியை தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ஏற்கனவே பஞ்சாப் மாநிலத்தில் மற்ற கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் இவரின் புதிய அரசியல் கட்சி தொடக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாஜக-வில் பதவியை ராஜினாமா செய்த நவ்ஜோத் சிங் சித்து, ஆம் ஆத்மி அல்லது காங்கிரஸ் கட்சியில் சேரக் கூடும் என கூறப்பட்டு வந்த நிலையில் "ஆவாஸ் இ பஞ்சாப்" என்ற புதிய அரசியல் கட்சியை சித்து தொடங்கியுள்ளார்.