பீகாரில் ஒரு ஹோட்டலில் இருந்து மின்னணு வாக்கு எந்திரங்களும், ஒப்புகைச் சீட்டு எந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முசாஃபர்பூரில் ஒரு ஹோட்டலில் இருந்து 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி, 2 ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் சார் ஆட்சியரால் கைப்பற்றப்பட்டன.


தேர்தல் அலுவலரான அவதேஷ் குமார் என்பவர் மின்னணு வாக்கு எந்திரங்களை ஹோட்டலில் சென்று வைத்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. பழுதான மின்னணு வாக்கு எந்திரங்களுக்கு பதிலாக பயன்படுத்துவதற்கான மாற்று எந்திரங்கள் மற்றும் கருவிகளையே அவர் ஹோட்டலில் வைத்திருந்ததாக மாவட்ட ஆட்சியர் அலோக் ரஞ்சன் கோஷ் கூறியுள்ளார்.