ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் போலீசார் 2 வெடிகுண்டுகளுடன் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு படை வீரர் கைது செய்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த பாதுகாப்பு படை வீரர் ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாட்டு கோடில் பணியாற்றி உள்ளார்.


டெல்லி விமானத்தில் ஏறுவதற்காக சென்ற அவரின் பையை விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். அதில் 2 கை எறி குண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த வீரர் கைது செய்யப்பட்டார்.


அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் எல்லை பாதுகாப்பு படை வீரர் என்பதும், காஷ்மீரின் உரி பகுதியில் பாதுகாப்பு பணி செய்து வருபவர் என்பதும் தெரிய வந்துள்ளது.


இவர் எதற்காக எறிகுண்டுகளுடன் டெல்லி செல்ல முயன்றார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.