சோனியா காந்தியிடம் தேர்தல் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது கட்சியை தேர்தல் கமிஷனில் முறைப்படி பதிவு செய்வது தொடர்பாக டெல்லி சென்றுள்ளார். இதையடுத்து, நேற்று டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்போது பிரியங்கா காந்தியும் உடனிருந்தார். 


இதனையடுத்து இன்று காலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஐக்கிய ஜனநாயயக் கூட்டணியின் தலைவருமான சோனியாவை இன்று சந்தித்துப் பேசினார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசியல் சூழல் குறித்து சோனியா காந்தியுடன் பேசினேன், தேர்தல் கூட்டணி குறித்து சோனியா காந்தியுடன் எதுவும் பேசவில்லை என்று குறிப்பிட்டார்.