இந்திய முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் உடல் நலம் பெற கோவிலில் சிறப்பு யாகம் நடத்தும் பிஜேபி தொண்டர்கள்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் பிரதமர் மற்றும் பாரத்திய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் நேற்று டெல்லி AIIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் பரிந்துறையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரது நலன் குறித்து சிறப்பு கவனம் ஏற்றுக்கொள்ள மருத்துவர் ரண்டீப் குலேரியா நியமிக்கப்பட்டுள்ளார். 


இவரது மேற்பார்வையில் வாஜ்பாயி அவர்களுக்கு மருத்துவ கண்கானிப்பு நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், பாரத்திய ஜனதா கட்சியின் தொண்டர்கள் அட்டல் பிஹாரி வாஜ்பாயி-ன் உடல்நலம் குணமடைய கோயில்களில் சிறப்பு யாகங்களை நடத்தி பிராத்தனை செய்து வருகின்றனர்.