ஐதராபாத்: ஐதராபாத்தில் பொறியியல் மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராமில் தன் தற்கொலைக்கான குறிப்பை பதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சம்பவத்தில் தற்கொலை செய்துகொண்டவர், சி மௌனிகா எனும் 21 வயதான பொறியியல் இறுதி ஆண்டு மாணவி என தெரிகிறது. அவரது தாயார் மௌனிகாவினை திட்டியதால் ஆத்திரமடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தினில் "தற்போதெல்லாம் நான் சந்தோஷமாக இருப்பது யாருக்கும் பிடிப்பதில்லை, எனக்கு ஏன் இந்த நிலைமை என்றும் எனக்கு புரியவில்லை. இருந்தாலும் நான் அனைத்தையும் சந்தித்துக்கொன்டு தான் இருக்கின்றேன், எனினும் இனிமேல் சந்திக்க விரும்பவில்லை" என பதிவிட்டுள்ளார்.


மற்றொரு சம்பவத்தில், அதே நகரத்தை சேர்ந்த சாகிப் ஹுசைன் என்பவர் தனது தற்கொலையின் முழு நிகழ்வுகளையும் தனது கைப்பேசியில் பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். உறவினர்கள் சிலர் தன்னை பனம் கேட்டு தொந்தரவு செய்து வருவதால் தான் இந்த முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.