திரிபுரா சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு பின்னர் மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, முன்னேற்ற பாதையை நோக்கி திரிபுரா அடியெடுத்து வைத்துள்ளது என தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

59 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டமன்ற தேர்தலில் 43 இடங்களை பிடித்து தனி பெரும்பான்மையுடம் பாஜக ஆட்சி பிடித்தது!


கடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவினை தங்கள் கோட்டையாக வைத்திருந்த கம்யூனிஸ்ட கட்சியினரை வீழ்த்தி பாஜக இந்த வெற்றியை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


மொத்தம் உள்ள 59 இடங்களில் பாஜக 43, கம்யூனிஸ்ட 16 இடங்களை பிடிக்க, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது வேதனை. கடந்த ஆட்சியில் திரிபுரா சட்டமன்றத்தில் ஒரு MLA கூட இல்லை, ஆனால் தற்போது தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது பாஜக.


இந்த வெற்றிக்கு காரணம் பிரதமர் மோடி தான் என பாஜக உறுப்பினர்கள் அனைவரும் தெரிவித்து வருகின்றனர், ஆனால் இந்த வெற்றியானது பாஜக தொண்டர்களால் பெறப்பட்டது. அவர்கள் தான் இந்த வெற்றிக்கு காரணம் எனவே இந்த வெற்றியை அர்களுக்கே காணிக்கையாக்குகிறோம் என மோடி தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து பேசிய மோடி, "சூரியன் மறைகையில் சிவப்பு நிறத்தில் இருக்கும், ஆனால் மீண்டும் உதயமாகையில் காவி நிறத்துடனே எழுந்து நிற்கும்" என குறிப்பிட்டார். மேலும் மற்ற மாநிலங்கள் முன்னேற்ற பாதையில் பயணித்து வரும் நிலையில் தாங்களும் அப்பாதையில் இணைவதற்கான முதல் அடியாக இந்த வெற்றிப் பரிசினை எங்களுக்கு அளித்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.