பாட்னா: பீகார் துணைத் தலைவர் மற்றும் பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி, பாட்னா சி.ஜே.எம். நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக ஒரு அவதூறு மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன்பே, தனது ட்விட்டர் பக்கத்தில் சுஷில் குமார், "மோடி என பெயர் வைத்தவர்கள் அனைவரும் திருடர்கள் எனக் கூறிய ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்ய உள்ளேன்" என பதிவிட்டு இருந்தார். 


சுஷில் குமார் மோடி தாக்கல் செய்துள்ள மனுவில், குறைந்தபட்சம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் எனவும், இந்த வழக்கு தொடர்பாக ராகுல்காந்தி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் சுஷில் மோடி கோரியுள்ளார்.