புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து 271 இந்தியர்களை வெளியேற்ற உள்ளதாக அமெரிக்கா அரசு தகவல் தெரிவித்துள்ளது என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக பார்லிமென்டில் சுஷ்மா, அமெரிக்காவில் சட்ட விரோதமாக வசிக்கும் 271 இந்தியர்களை வெளியேற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து விபரங்களை கேட்டுள்ளோம். இந்த பட்டியலில் உள்ளவர்களை பற்றிய தகவல்கள் உறுதி செய்யப்படாத வரை, அதனை நாம் எப்படி நம்ப முடியும். இதற்காக கூடுதல் தகவல் கேட்டுள்ளோம். இந்தியர்கள் என உறுதி செய்யப்பட்ட பின்னர் அவர்களை வெளியேற்ற வேண்டும் என கூறியுள்ளோம்.


இவ்வாறு அவர் கூறினார்.