புதுடெல்லி: மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
 
மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான பரிசோதனை செய்யப்படுகிறது. அவருடைய குடும்பத்தினர் வகையில் பொருத்தமான சிறுநீரகம் இதுவரை கிடைக்கவில்லை. அது கிடைத்தும் விரைவில் சிறுநீரகம் மாற்றப்படும். அவரின் சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளதால் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கூறியுள்ளனர்.


இந்நிலையில், அவரது உடலுக்கு பொருந்தக்கூடிய வகையில் சிறுநீரகம் கிடைத்ததால் இன்று காலை 9 மணியளவில் சுஷ்மாவுக்கு சிறுநீரக மாற்று ஆபரேஷன் தொடங்கியது.