லக்னோ ஆக்ராவில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த தம்பதி மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சி உள்ளாகி உள்ளது. இது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில போலீசார் 5 பேரை கைது செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுவிட்சர்லாந்தை சேர்ந்த இந்த தம்பதியினர், உ.பி., மாநிலம் ஆக்ராவிற்கு சுற்றுலா வந்தனர். ஊரை சுற்றி பார்த்த இவர்கள் பதேபுர்சிக்ரி என்ற இடத்தில் மர்ம கும்பல் தாக்கியது. 


தற்போது சம்பவம் தொடர்பாக நேற்று 2 பேர் கைது செய்தது போலீசார். மேலும் அடையாளம் தெரியாத 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். தற்போது 5 பேரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். 


வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மீது வன்முறை நடத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்-அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில அரசிடம் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.