பாண்டா: உத்திரபிரதேச மாநிலம் பாண்டாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 2 பேர் சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திரபிரதேச மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் மோட்டார் சைக்கில் ஒன்று டேங்கர் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளர். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


இந்த விபத்தானது சிவராம்பூர் பகுதியில் நடைப்பெற்றுள்ளதாக அப்பகுதி காவல்துறை ஆனையர் கர்வி விஜயோந்திரா திவாரி தெரிவித்துள்ளார்.


இந்த விபத்தில் இறந்தவர்கள் பிரசாந்த்(18) மற்றும் மித்தலேஷ் பட்டேல் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


விபத்திற்கான காரணம் குறித்து தகவல்கள் இல்லை. இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.