ஜூலை மாதம் 5,12, 19, 26 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,264 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 


இந்நிலையில், தமிழகத்தில் ஜூலை மாதம் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கின் போது ஜூலை மாதத்தில் உள்ள 5,12, 19, 26 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த நான்கு ஞாயிற்றுக் கிழமைகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.


READ | கொரோனில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.... COVID-யை குணப்படுத்தாது..!


இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூலை மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமையில் தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்க படுவதால் டாஸ்மாக் மதுபான கடைகள் விடுமுறை அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.