ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் உள்ள கோகோ ஹம்மாமா விமான நிலையத்திற்கு அருகே இன்று(செவ்வாய்) காலை, எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) முகாமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்தாக்குதலில், 2 பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) -ன், 182 பட்டாலியன் முகாமில் விடியற்காலை 4:00 மணியளவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர், இச்சம்பவத்தில் மூன்று எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) ஜவான்கள் காயமடைந்துள்ளனர்.


எனினும் பாதுகாப்பு படைகள் முழு வீரியத்துடன் பதிலடி கொடுத்தனர் என தெரிகிறது.


இந்நிலையில் தாக்குதல் தொடர்ந்து நடைப்பெற்றுவருவதால், விமான நிலையத்தினுல் எந்த ஊழியர்களும், பயணிகளும் அனுமதிக்கப்பட வில்லை.


(மேலும் விவரங்கள் காத்திருக்கிறது)