ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிசூடு என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் ஹாண்ட்வாரா வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. 


அதன் அடிப்படையில் நேற்றிரவு வனப்பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளை குறி வைத்து துப்பாக்கிசூடு என்கவுண்டர் நடத்தினர்.இதில் தீவிரவாதிகளும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலானது இன்று அதிகாலை வரை நீடித்தது.


இந்நிலையில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் அடையாளம் தெரியாத தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.