ஜம்மு காஷ்மீரில் போலீஸ் மீது மிளகாய் பொடியை தூவி மேலும் அந்த போலிசை தாக்குதல் நடத்தியதுடன், அவரிடம் இருந்த ஏகே 47 ரக துப்பாக்கியையும் பயங்கரவாதி கும்பல் பறித்துச் சென்றுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முகம்மது ஹனீப் என்ற போலீஸ், பணி முடித்து தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல், அவர் மீது மிளகாய் பொடி தூவி உள்ளது. தொடர்ந்து அவரை பலமாக தாக்கி விட்டு, அவரிடம் இருந்த ஏகே 47 ரக துப்பாக்கியை பறித்துச் சென்றுள்ளது.


தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றவர்களையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் காஷ்மீரில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஏப்ரல் 2 ம் தேதி பிரதமர் மோடியும் காஷ்மீர் செல்ல உள்ளதால் தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.