சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது திருமண புகைப்படங்கள் அல்லது தனது பெற்றோரின் திருமண புகைப்படங்களை பதிவேற்றுவது வழக்கம்.  ஆனால் பெற்றோரின் திருமணத்தை யாரும் நேரில் பார்த்திருக்க முடியாது, அதனை தான் ஒரு பெண் செய்திருக்கிறார்.  தனது தாயிற்கு இரண்டாவது திருமணம் செய்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



அந்த பெண்ணின் தாயிற்கு தந்தைக்கும் 15 வருடங்களுக்கு முன்னர் விவாகரத்து நடந்து விட்டதாம்.  ஆனால் அந்த விவாகரத்து நல்லது தான் என்று கூறுகிறார்.  ஏனெனில் அவர் இருந்தது ஒரு டாக்சிக் ரிலேஷன்ஷிப் என்றும், அந்த உறவில் தனது தாய் அதிகப்படியான துன்பத்தை அனுபவித்தார் என்றும் கூறுகிறார்.


 



மேலும் எனக்கு 16 வயதில் சகோதரன் இருக்கிறான், அவனும் நானும் எங்களுக்கு தந்தை வேண்டும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கவில்லை.  ஆனால் தற்போது தாயின் நாங்கள் தந்தை உருவத்தில் ஒருவரை வரவேற்க தயாராகியுள்ளோம் என்று கூறுகிறார்.  மேலும் திருமணத்திற்காக தனது தாய் மெஹந்தி போட்டுக்கொள்ளும் புகைப்படத்தையும், அவர் மகிழ்ச்சியாக நடனமாடும் வீடியோவையும் பதிவிட்டு, தனது தாய் இப்போதுதான் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.   


இவரின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.  பெற்றோர்களுக்கு குழந்தைகள் எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும் என்றும், புது மணமக்களுக்கு பலரும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


ALSO READ | ’16 வயதில் திருமணம் செய்தால் தப்பில்லை’ உ.பி எம்.பி பேச்சு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR