திருவனந்தபுரம்: கேரளாவில் சமிபத்தில் நடைபெற்ற ஜன்மாஷ்டமி கொண்டாட்டத்தின் போது, மூன்று வயது சிறுவனை இரண்டு மணிநேரத்திற்கு மேலாக, ஒரு இலை வடிவ பலகையினில் கட்டப்பட்டு ஊர்வளம் கொண்டுச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில், பயனூர் என்ற இடத்தில் இந்த கொடுரம் நடந்துள்ளது.


அந்த சிறுவனின் இரண்டு மணி நேர வேதனைகளையும், புகைப்படத்தையினையும் கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் முகப்புத்தகத்தினில் வெளியிட்டுள்ளார்.


இந்தச் சம்பவம் தொடர்பாக, 15 நாட்களுக்குள் அறிக்கை ஒன்றினை சமர்பிக்குமாறு உள்துறை செயலாளர், மாநில காவல்துறை தலைவர் மற்றும் கண்ணூர் மாவட்ட கலெக்டரின் ஆகியோரிடம், குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான கேரள மாநில ஆணையம் கேட்டுள்ளது.



எனினும் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தவொரு புகாரும் கிடைக்கவில்லை என்று பயனூர் காவல்துறை தெரிவித்துள்ளது.