சீனாவுடன் அமைதியான தீர்வை எட்டுவதில் இந்தியாவின் இராணுவ மற்றும் இராஜதந்திர வெற்றி அடைந்து வரும் வேளையில், கார்கில் வெற்றி தினம் 2020 இன் 21 வது ஆண்டு கொண்டாடப்படுகிறது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீரில் உள்ள கார்கில் பகுதியில் இந்திய - பாகிஸ்தான் ராணுவத்திற்கு இடையே 1999ஆம் ஆண்டு மே மாதம் துவங்கி ஜூலை வரை நடைபெற்ற கார்கில் போரில், சுமார் 500க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் தங்களது இன்னுயிரை நாட்டுக்காக தியாகம் செய்தனர். ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் கௌரவிக்கும் விதமாகவும் இன்று கார்கில் வெற்றி தினம்  கொண்டாடப்படுகிறது.


ALSO READ | IAF Western Air Command தலைவராக நியமிக்கப்படுகிறார்  ஏர் மார்ஷல் வி.ஆர். சவுத்ரி


புதுடில்லி: கார்கில் ஆபரேஷன் விஜய்யின் வெற்றியை நினைவுகூரும் வகையில் ஜூலை 26 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், 21 வது கார்கில் வெற்றி தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் போராட்டத்தில் சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த இந்தியாவின் இராணுவ மற்றும் இராஜதந்திர வலைமையை பறைசாற்றும் விதமாக உள்ளது. 


கால்வானில் பல நாட்கள் வரிசைப்படுத்தல் மற்றும் பதட்டங்களுக்குப் பிறகு, மூன்று ரோந்து தளங்களிலிருந்து முழுமையான பணிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 


கால்வனில் கார்கிலின் சாயல் இருப்பதை பாதுகாப்பு நிபுணர்கள் கண்டனர். இந்திய சீன எல்லையில் ஜூன் 15 ம் தேதி கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையிலான வன்முறை மோதல்களில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதை பாகிஸ்தானுடனான கார்கில் போருடன் ஒப்பிட முடியாது தான். ஏனென்றால், கார்கில் போரில் சுமார் 500 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.


ஆனால் கால்வான், கார்கிலுக்குப் பிறகு நடந்த முதல் பெரிய எல்லை மோதல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கார்கில் போரில் கற்றுக்  கொண்ட பாடங்கள் மூலம் கால்வான் போன்ற சமபவங்களை தவிர்த்திருக்கலாம் என, பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.


ALSO READ | கார்கில் விஜய் திவாஸின் 21 வது ஆண்டு விழா இன்று; தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தல்


கார்கில் விஷயத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்ததை போலவே,  கல்வான் விஷயத்திலும் தோல்வி அடைந்துள்ளதா என்று கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. மார்ச் முதல் கால்வானில் பதற்ற நிலை உருவாகி வந்தது.


1999 ஆம் ஆண்டு மே முதல் வாரத்தில்  3 ராணுவ பிரிவிற்கு, படாலிக் செக்டார் (Batalik sector) பகுதியில்  ஊடுருவல் செய்யப்பட்டிருப்பது குறித்த தகவல் கிடைத்தது. பின்னர், ஊடுருவல் மிகவும் பெரிய அளவில் நடந்தது கண்டறியப்பட்டது என கார்கில் போரின் போது ஆபரேஷன் விஜய் நடவடிக்கையில்  8 மவுண்டெயின் டிவிஷனுக்கு தலைமை தாங்கிய, ஓய்வு பெற்ற, லெப்டினன்ட் ஜெனரல் மொஹிந்தர் பூரி முன்பு கூறியிருந்தார்.


கால்வானும் திடீரென நடந்தது, இந்தியா இதை முன்னதாக அறியவில்லை. 1999 ஆம் ஆண்டு கார்கில் போரின்போது சோர்பத் லா பாஸில் ( Chorbat La Pass)  பகுதியில் லடாக் சாரணர் பிரிவு ஒன்றை வழிநடத்தியதற்காக இரண்டாவது மிக உயர்ந்த துணிச்சலான விருதைப் பெற்ற ஓவு பெற்ற கர்னல் சோனம் வாங்சுக், சீனர்களை ஒருபோதும் நம்பக்கூடாது என்று கூறினார். அவர்கள் தங்கள் நீண்டகால ஆதாயத்தை கருத்தில் கொண்டு  தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே இருப்பவர்கள். அவர்கள் பெரும்பாலும் நமக்கு தெரியாமலேயே நம் பகுதியை ஆக்கிரமிக்க முயற்சிப்பார்கள்," என்று அவர் கூறினார்.