கணவன் முடி வெட்டாததால் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தி மனைவி வழக்கு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு விசித்திர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு பெண் தான் தனக்கு தனது கணவனிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு காரணம் அவரது கணவர் போனி டெயில் முடி வளர்த்துள்ளார். அது தனக்கு பிடிக்கவில்லை அதனால் அவரை விவாகரத்து செய்ய வேண்டும் என கேட்டுள்ளார். பெண்களும் தங்களின் கணவரின் முடி பிரச்னைக்காக விவகாரத்து கேட்டு விண்ணப்பித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


முதலில் கணவரின் போனி டெயில் பிடிக்கவில்லை என விவாகரத்து கேட்ட பெண் தற்போது அவரது போனி டெயில் பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக கடந்த 6 மாதமாக பிரிந்து வாழ்கிறார்.


இது குறித்து அவரது கணவர் கூறும் போது அவர் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், அவரது பெற்றோர்கள் சிறு வயது முதலே அதை பாரம்பரியமாக சொல்லி கொடுத்துள்ளதாகவும். மேலும் அவர்கள் இவரது திருமணத்திற்கு முன்பு எந்த காரணத்திற்காக இந்த முடியை வெட்ட கூடாது என சத்தியம் வாங்கியதாகவும். இதன் காரணமாகவே தன் மனைவி விவாகரத்து வரை சென்றும் தான் முடியை எடுக்காமல் இருப்பதாகவும் கூறினார். மேலும், இந்தவழக்கு குறித்து விசாரணை நடந்து வருகிறது.