புதுடெல்லி: வட மாநிலங்களில் மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இன்று அதிகாலை முதல் அடர்ந்த பனிமூட்டம் மற்றும் காற்று வீசுவதால் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் ரயில், விமான சேவைகளிலும் மிகவும் பாதிப்பு ஏற்பட்டது. பனிப்பொழிவால் இன்று 55 ரயில்கள் சில மணி நேரம் தாமதம் செயல்படுகிறது. மேலும் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 22 ரயில்களின் பயண நேர மாற்றியமைக்கப்பட்டுள்ளது எனவும் டெல்லி வடக்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது.


அதுபோல இந்திராகாந்தி சர்வதேச விமான நிலைய பகுதியில் பனி சூழ்ந்ததால் 7 சர்வதேச விமானங்கள் மற்றும் 6 உள்நாட்டு விமானங்கள் இன்று டெல்லியில் புறப்பட தாமதமானது. 


உத்தரப் பிரதேச மாநிலமான லக்னோ, கான்பூர், பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.