ஜம்மு காஷ்மீரில் 3 ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான 3 ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளை ஸ்ரீநகரில் போலீசார் கைது செய்தனர். இந்த மூன்று தீவிரவாதிகளை ஸ்ரீநகர் - பரமுல்லா சாலையில், காரில் சென்று கொண்டிருந்த போது போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். 


தற்போது கைது செய்யப்பட்ட அந்த மூன்று தீவிரவாதிகளிடம் இருந்து வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அந்த மூன்று தீவிரவாதிகளிடம் ஜம்மு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.