சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிரடிப்படை போலீசார் நடத்திய சோதனையில் மூன்று நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்ச


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சத்தீஸ்கர் மாநிலத்தின் கொந்தகோனில் உள்ள ஹேடிலியில் தீடிரென 10 கிலோ மீட்டர் தூரத்தில் டிபின் குண்டு வெடித்தது. இதை தொடர்ந்து அதிரடிப்படை போலீசார் நடத்திய சோதனையில் இன்று காலை மூன்று நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


கடந்த மார்ச் 11-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பேஜா என்ற பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது நக்சலைட்கள் தாக்குதல் நடத்தியதில் 9 வீரர்கள் பலியானார்கள்.


அதை தொடர்ந்து கடந்த அக்டோபர் 15, ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் அதிரடிப்படை போலீசார் நடத்திய தாக்குதலில் 5 நக்சலைட்டுகலும் இரண்டு போலீசாரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


மேலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜப்பூர் ஜங்லாவில் அதிரடிப்படை போலீசார் நடத்திய சோதனையில் 2 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிபிடத்தக்கது.