கடந்த 2013-ம் ஆண்டில் தனிஷ்(30) என்பவர் முதல் முறையாக திருமணம் செய்தார். பின்னர் மனைவியை ஆபாசமாக படம் எடுத்து எம்.எம்.எஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது மனைவியையும், அவரது பெற்றோர்களையும் எம்.எம்.எஸ்-சை காட்டி மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. அடுத்து அவர் தன் மனைவியை முத்தலாக் முறையில் மணவிலக்கு செய்து விட்டார்.


பின்னர் இரண்டாம் மணம் புரிந்தார். இந்த இரண்டாவது திருமணமும் ஓராண்டிலேயே முடிவுக்கு வந்தது. 


பின்னர் தனது உறவினரான 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்  செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டார். பின்னர் அச்சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. அவரையும் ஆபாசமாக படம் எடுத்து பெண்ணின் பெற்றோரை மிரட்டியும் வந்துள்ளார். 


தனிஷ் நான்காவது முறையாக திருமணம் செய்துக் கொள்ள முயற்சியில் இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட முதல் மூன்று மனைவியர் காவல்துறை துணைக்கண் காணிப்பாளர் தினேஷ் திரிபாதியிடம் புகார் அளித்தனர்.


தனிஷ் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளோம் என தினேஷ் திரிபாதி கூறினார்.