திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் அருகே உள்ள லட்டு செய்யும் பூந்தி சமையல் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் அருகே இடதுபுறம் இருக்கும் பூந்தி சமைக்கும் அறையில் இன்று ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு உள்ள அறையின் மேல் பகுதி வரை தீ கொழுந்து விட்டு எரிந்தது. 


இதுகுறித்த தகவலின்பேரில் 2 தீயணைப்பு வண்டிகளுடன் வந்து வீரர்கள் 15 நிமிடத்தில் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.