கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., தேசிய கீதம் இசைத்து கொண்டிருக்கும் போது தொடர்ந்து போனில் பேசி கொண்டு இருந்த காட்சி வீடியோவில் பதிவு ஆகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த ஜக்மோகன் டால்மியாவின் மகளும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான வைஷாலி டால்மியா, தேசிய கீதத்தை அவமதித்ததாக பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.


மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹவுராவில் விளையாட்டு நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட வைஷாலி, தேசிய கீதம் இசைத்து கொண்டிருக்கும் போது தொடர்ந்து போன் பேசிய வீடியோ வந்துள்ளது.


இந்த காட்சி அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.