சத்தீஸ்கர்: மற்றொரு கொடுமையான சம்பவத்தில், சத்தீஸ்கர் சாலையில் பேருந்து விபத்துக்ள்ளானதில் இருவர் பலியாகினர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தரின் கங்கர் சாலையில், பயசிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பலியாகினர். மேலும் 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.


இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. விபத்திற்கான காரணம் குறித்தும் தகவல்கள் வெளியாவில்லை. சாலையில் சென்றுக்கொண்டிருந்த பேருந்து அருகாமையில் இருந்த சாலை சரிவில் தடம்புரண்டு விழுந்துள்ளது.


தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறையினர், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அருகாமையில் இருக்கும் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.


இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.