ஒடிசா மாநிலம் கெந்தர்பரா பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் சம்பவயிடத்திலேயே இருவர் பலியாகினர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டு மோட்டார் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதியதில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் இருவர் சம்பவயிடத்தில் உயிர்யிழந்தனர், மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இச்சம்பவத்தில் இறந்தவர்கள் சஞ்ஜெய் ஜீனா(22) மற்றும் பாதுஷா பிள்ளை(38) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


காயங்களுடன் மீட்கப்பட்டவர் அருகாமையில் இருக்கும் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.


விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.