டெல்லியில் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய இரண்டு சகோதரிகளின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


டெல்லியில் உள்ள நொய்டா செக்டர் -49 என்ற இடத்தின் அருகில் உள்ள பரூலாவிலுள்ள  ஒரு மரத்தினுள் தூக்கிலிடப்பட்ட இரண்டு சிறுவர்களின்  உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூக்கிலிடப்பட்ட
இருவரும் சகோதரிகள் ஆவார்கள் ஒருவருக்கு 18 வயது மற்றொருவருக்கு 13 வயது நிறைந்துள்ளது.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு சகோதரிகளும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்பது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.