JEE பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தேர்வில் வெற்றி பெற முடியாத வருதத்தின் ஐதராபாத் மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொறியியல் படிப்பிற்கான தேசிய நுழைவு தேர்வு Joint Entrance Examination (JEE) பொதுதேர்வில் தேர்ச்சி அடைய முடியவில்லை என்ற வருத்தத்தில் ஐதராபாத் மாநிலத்தில் 17-வயது சிறுவன் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இச்சிறுவனது தற்கொலையுடன் சேர்த்து இதுவரை 20 மாணவர்கள் தேர்வு தோல்வியால் இறந்துள்ளதாக ஐதராபாத் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.


ஐதராபாத்தில் இறந்த சிறுவன் பெயர் சஹெயில் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகனான இவர் தனது தந்தையின் கைத்துப்பாக்கியை கொண்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிகிறது.


செகந்திரபாத்தில் உள்ள ஆகாஷ் இன்ஸ்டிடூயூட் பார் JEE கோச்சிங் சென்டரில் இவர் கோச்சிங் பெற்றதாகவும் தெரிகிறது. 


JEE தேர்வுகளானது, NIT, IIIT, SFTI மற்றும் CFTI ஆகிய கல்லூரிகளில் உள்ள பொறியியல் மற்றும் கட்டிடகலை இளங்கலை படிப்பிற்கான இடங்களை நிரப்ப நடத்தப்படுகிறது. 


முன்னதாக கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட JEE 2019 பொது தேர்விற்கு 9,29,198 பொறியியல் பிரிவு மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். தற்போது ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட தேர்விற்கு 9,35,741 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். சுமார் 6,543 பொறியியல் பிரிவு மாணவர்கள் ஏப்ரல் மாத தேர்விற்கு அதிகமாக விண்ணப்பித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


அதே வேளையில் கட்டிடக்கலை பிரிவு தேர்விற்கு ஜனவரி மாதத்தில் 1,80,052 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர், ஏப்ரல் மாத தேர்விற்கு 1,69,767 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதாவது., சுமார் 10,285 மாணவர்கள் ஏப்ரல் மாத தேர்விற்கு குறைவாக விண்ணப்பித்து உள்ளனர்.


ஐந்த நாட்கள் நடத்தப்பட்ட ஏப்ரல் மாத தேர்வானது கடந்த ஏப்ரல் 12-ஆம் நாள் முடிவடைந்தது. இந்த JEE 2019 பொது தேர்வில் தேர்ச்சி பெறும் 2,24,000 மாணவர்கள் JEE 2019 முன்மை தேர்விற்கு அனுப்பி வைக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.