பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார்  உடல்நலக்குறைவால் காலமானார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பாஜக அரசில் ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்து வருபவர் அனந்தகுமார் (59). கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவர் பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பெங்களூரு தெற்கு தொகுதியில் 6 முறை வெற்றி பெற்றுள்ளார். 


இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு  புற்றுநோயால் அவதிப்பட்டு இருந்தார்.  அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற இவர், பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் அனந்த குமார் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.