உத்திர பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திரபிரதேச மாநிலம் பலராம்பூரின் உத்திரோல் பகுதியை சேர்ந்த சிறுமியை, அதேப்பகுதியை சேரந்த 33-வயது ஆண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட ஆணை அப்பகுதி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


இதுதொடர்பாக காவல்துறை ஆணையர் யுப்போந்தர் சிங் தெரிவிக்கையில்... சம்பநாள் அன்று பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டு இருந்ததாகவும், அவரது அண்டை வீட்டை சேர்ந்த ஆண் சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.


தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் நிலை ஆபத்து கட்டத்தினை தாண்டிவிட்டதாகவும். விரைவில் நலம் பெருவார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொடுத்துள்ள புகாரின் பேரில், குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு விசாரணையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.