உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்குத் தடை விதிப்பதாக அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் மகாராஷ்டிர மாநில அரசு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்தது. மேலும் தடை அமலுக்கு வந்தது முதல் தீவிரக்கண்காணிப்பும், விதி மீறல்களுக்கு தக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. 


இந்நிலையில் தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில், மாநிலம் தழுவிய பிளாஸ்டிக் பயன்பாட்டுத் தடையை உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஜூலை 15-ம் தேதி முதல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கான தடை அமலுக்கு வருகிறது.