பெண் ஒருவர் தனது கணவனுடன் வாதத்தை ஏற்படுத்திய ஆண்களை தட்டி கேட்டதற்கு அவரை அரை நிர்வாணமாக மானபங்க படுத்திய கொடூரம்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப்பிரதேசம்: கடந்த சனிக்கிழமை தனது கணவருடன் சண்டையிட்ட சிலரை அவரது மனைவி தட்டி கேட்டதற்கு அந்த பெண்ணை தெருவில் அரை நிர்வாணமாக மானபங்க படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்த சம்பவமானது, கோபிநெஞ்ச் கோட்வாலி பகுதியில் உள்ள ராப்ரி கிராமத்தில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடந்தது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மானேசா தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த பெண்ணை அதே கிராமத்தை சேர்ந்த டாபங் லால் சந்த் என்பவர் துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர். மனிஷா மற்றும் அவரது கணவர் தீனாநாத் ஆகியோரின் எதிர்ப்பைத் தொடர்ந்து, சாந்தின் கும்பல் அந்த பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி அடித்து நொறுக்கி, கணவனைத் தாக்கியது.


அதுமட்டும் இன்றி அந்த பெண்ணை ஆடைகளைக் களைந்து வீதி வீதியாக இழுத்துச் சென்றனர். இந்த பதை பதைக்கும் காட்சியை யாரும் தட்டிக் கேட்க முன்வரவில்லை. இதனால் அந்தப் பெண் மானபங்கப்படுத்தப்பட்டு வீசியெறியப்பட்டாள். இந்த சம்பவத்தை அந்த கும்பல் வீடியோவாக பதிவும் செய்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டின் பெண்கள் பாதுகாப்பை அப்பட்டமாக காட்டியுள்ளது. 


இதையடுத்து, மிகவும் தாமதமாக தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் காயம் அடைந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்தது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், முக்கிய குற்றவாளியை கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், மற்றவர்களை தேடி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.