புது தில்லி: கொரோனா காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல நாடுகளில் சிக்கித் தவிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களை கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. வெளிநாட்டிலிருந்து வரும் நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்காக நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் முழுமையாக இன்று (வியாழக்கிழமை) தயாராக உள்ளன. இதுத்தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் நேற்று (புதன்கிழமை) தொடர் கூட்டங்களை நடத்தியது. இன்று 200 குடிமக்களுடன் ஏர் இந்தியாவின் ஒரு விமானம் அபுதாபியில் இருந்து இந்தியாவுக்கு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"வந்தே பாரத் மிஷன்":


"வந்தே பாரத் மிஷன்"என்ற இந்த பிரச்சாரத்தின் வெற்றிக்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லா பல மாநிலங்களின் தலைமை செயலாளர்களுடன் வீடியோ கான்பரன்சிங் நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. திட்டத்தின் படி, அரசாங்கம் வியாழக்கிழமை முதல் பல்வேறு நாடுகளுக்கு விமானங்களை அனுப்பத் தொடங்கும். ஆதாரங்களின்படி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்த பணியை செயல்படுத்துவதை கண்காணித்து வருகிறார். மேலும் இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சகம், சிவில் விமான போக்குவரத்து, சுகாதார அமைச்சகம் மற்றும் மாநிலங்களின் பிரதிநிதிகள் உட்பட பல அமைப்புடன் கூட்டங்களை நடத்தியுள்ளார். இந்த பணி தொடர்பாக பெரும்பாலான மாநிலங்களுக்கு நோடல் அதிகாரிகளை வெளியுறவு அமைச்சகம் நியமித்துள்ளது.


விமான நிலையங்களில் ஏற்பாடுகள் நிறைவடைந்தன:


கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நாட்டில் தடை செய்யப்பட்டிருந்த விமான நிலையங்கள் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வார முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அபுதாபியில் இருந்து 200 பயணிகளை ஏற்றிக்கொண்டு காலை 9.30 மணிக்கு கேரளாவின் கொச்சி சர்வதேச விமான நிலையத்தூக்கு முதல் விமானம் வர உள்ளது. திருவனந்தபுரம், டெல்லி, மும்பை உள்ளிட்ட பல விமான நிலையங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களை தரையிறங்குவார்கள். 


15000 இந்தியர்களை மீண்டும் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள்:


உலக நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் வளைகுடா நாடுகளிலிருந்து மலேசியா, பிரிட்டன் முதல் அமெரிக்கா வரை பல்வேறு நாடுகளில் இருந்து தாயகம் திரும்புவார்கள். இதற்காக ஏர் இந்தியா 12 நாடுகளில் இருந்து 15,000 இந்தியர்களை முதல் கட்டமாக மே 13  ஆம் தேதி சுமார் 64 விமானங்கள் இயக்கும். முதல் நாளில் வெளிநாடுகளில் இருந்து 10 விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது. வியாழக்கிழமை கொச்சியைத் தவிர, கோழிக்கோடு, மும்பை, டெல்லி, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் ஸ்ரீநகர் போன்ற நகரங்களில் விமானம் மூலம் வந்தடைவார்கள்.