தற்போது துணை குடியரசுத்தலைவராக இருக்கும் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், குடியரசு துணை தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வெங்கய்யா நாயுடுவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிடுகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இன்று மாலை 7 மணிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஏற்கனவே நடந்து முடிந்த குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்று நாட்டின் 14-வது குடியரசு தலைவராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.