திரிபுரா மாநிலத்தில் தனிப் பெரும்பான்மையுடம் பாஜக வெற்றிப் பெற்றதை அடுத்து, நாடுமுழுவதும் கட்சித் தொண்டர்கள் ஆரவாரமான கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

59 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டமன்ற தேர்தலில் 42 இடங்களை பிடித்து தனி பெரும்பான்மையுடம் பாஜக ஆட்சி பிடித்தது. கடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவினை தங்கள் கோட்டையாக வைத்திருந்த கம்யூனிஸ்ட கட்சியினரை வீழ்த்தி பாஜக இந்த வெற்றியை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


மொத்தம் உள்ள 59 இடங்களில் பாஜக 42, கம்யூனிஸ்ட 17 இடங்களை பிடிக்க, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது வேதனை. கடந்த ஆட்சியில் திரிபுரா சட்டமன்றத்தில் ஒரு MLA கூட இல்லை, ஆனால் தற்போது தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது பாஜக.


இந்நிலையில் நாடுமுழுவதும் பாஜக தொண்டர்கள் தங்களது வெற்றியை கொண்டாடி வருகின்றனர்!