சுதந்திரத்திற்குப் பிறகு முதல் தடவை மின்சாரம் பெற்ற ஜோகாபத் கிராமத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சத்தீஸ்கரின் சிந்துபூர் மாவட்டத்தின் உள்ள ஜோகாபத் கிராமத்தில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் தடவையாக தற்போது மின் இணைப்பு பெற்றுள்ளனர்.


சுதந்திரத்திற்குப் பிறகு பெற்ற முதல் மின் இணைப்பு என்பதால் ஜோகாபத் கிராமத்தினர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


இது தொடர்பாக அந்த பகுதி கிராம மக்கள் கூறுகையில்;- எங்கள் கிராமத்தில் மின்சாரம் கிடைத்ததால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலம் எங்கள் பிள்ளைகள் நன்கு படிப்பார்கள்,அவர்கள் வாழ்க்கையில் முன்னேற இந்த மின் விளக்கு உருதுனையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.